சிறப்பு பேருந்து இயக்கம்
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாள் (13/12/2024) மற்றும் பௌர்ணமி (14/12/2024)-யை முன்னிட்டு 12/12/2024 முதல் 15/12/2024 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்து) திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்படுள்ளது.