இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உடனடியாக 20 ஆயிரம் பேருக்கு வேலை- தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Published : Dec 10, 2024, 07:23 AM IST

Job opportunities in chennai : ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். அந்த வகையில் 20ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் தமிழக அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
15
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உடனடியாக 20 ஆயிரம் பேருக்கு வேலை- தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
job opportunities

வேலை தேடும் இளைஞர்கள்

வேலைவாய்ப்பை தேடி பல லட்சம் இளைஞர்கள் நாள் தோறும் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் சேர்வதற்காக இரவு பகல் பாராமல் படித்து தேர்வு எழுதுகின்றனர். அந்த வகையில் பல லட்சம் இளைஞர்கள் தேர்வில் கலந்து கொண்டாலும் சில ஆயிரம் பேர் மட்டுமே அரசு பணிக்கு தேர்வாகின்றனர்.

அதே நேரத்தில் அரசு பணியை விட அதிக சம்பளத்தில் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

25
job camp

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

அந்த வகையில் வாரந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14.12.2024 சனிக்கிழமை அன்று மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
jobs

20ஆயிரம் பேருக்கு வேலை

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.  இம்முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு.
 

45
job vacancy

உடனே விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது.

55
Job Alert

ஆட்சியர் அழைப்பு

மேலும், இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகியோ , https://forms.qle/qsZbxrrSn547L9ep7 என்ற Geogle Link-லோ தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories