தமிழக மக்களுக்கு இன்று வரும் குட்நியூஸ் - அண்ணாமலை சொல்லும் சீக்ரெட்

Published : Jan 22, 2025, 08:09 AM IST

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு இன்று நற்செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PREV
14
தமிழக மக்களுக்கு இன்று வரும் குட்நியூஸ் - அண்ணாமலை சொல்லும் சீக்ரெட்
Tungsten Protest

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிப் பகுதியில் அமையவிருக்கும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர்கள் அரிட்டாப்பட்டி விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சரை நேரில் சந்திக்கச் சென்றுள்ளனர்.

24
Tungsten

இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வி்ல் பங்கேற்கும் விதமாக நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் விவகாரத்தில் புதன் கிழமை (இன்று) நல்ல செய்தி வந்து சேரும், தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்சினையில் சுமூக தீர்வை எட்டவே மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

34
Tungsten Protest

கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வகுப்பறையில் பேசவில்லை. அதனால் இது தொடர்பாக மேலும் விவாதிக்க வேண்டாம். அதே போன்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சொன்ன கருத்து குறித்தும் நான் விவாதிக்க தயாராக இல்லை. அந்த கருத்தை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். 

44
Tungsten Protest

ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கூலித் தொழிலாளியின் புகார் மனுவை ஏற்க காவல் துறையினர் மறுத்ததால் அவர் காவல் நிலையம் முன்பாகவே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூலித் தொழிலாளியின் புகார் மறுக்கப்பட்டதா என துறை ரீதியாக விசாரணை நடத்தி தெளிவு படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories