தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சாதி சான்றிதழ் தொடங்கி பொதுமக்களுக்குத் தேவையான எந்தவித ஆவணமாக இருந்தாலும் உரிய சான்றிதழ்களுடன் முறையிடப்படும் பட்சத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தின் தரப்படும் மனுக்கள் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதப்பதாக தகவல் வெளியானது.