ஆனால் ஒரு சில அரசுப்பளிகளில் கட்டடங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடங்களை கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு மரத்தடியில் உட்கார்ந்து ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இந்த விஷயத்தை கையிலெடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி சீருடை அளவெடுத்த ஆண் டெய்லர்! கட்டாயப்படுத்திய ஆசிரியை! மாணவி பரபரப்பு புகார்! நடந்தது என்ன?