பணமதிப்பு நீக்கம், மக்களால் எளிதாக அனுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்களை மேலும் அவமானம் படுத்தப்படுகின்றனர். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவமானமாகத் தெரிகிறது.இந்தநிலையில் லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடைய நடைபெற்ற தனிப்பட்ட வீடியோவை பாஜக நிர்வாகி வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது எனது வருத்தத்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.