இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி என்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி வெளியிட்டு வந்தனர். மேலும் போனில் சார் என குற்றவாளி ஞானசேகரன் குறிப்பிட்டதாகவும், இதனால் யார் அந்த சார் என்ற சர்ச்சை தமிழக சட்டப்பேரவை வரை வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகிறது.