இந்த நிலையில் இன்று உத்தண்டியில் பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை தொடர்பாக கூறுகையில், மருத்துவர் ஐயா உடல் நிலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சோதனை செய்ததில் ஒன்றும் இல்லை. சிலர் போன் செய்து ஐயாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்கள், ஐயாவிற்கு உடல் நிலை சரியில்லை வந்து பாருங்கள் என அழைத்துள்ளனர். ரொம்ப அசிங்கமா இருக்கு, ராமதாஸை வைத்து உடன் இருப்பவர்கள் டிராமா செய்கிறார்கள்.
ஐயாவிற்கு 87 வயது ஆகிறது. செக்ஆப் சென்றுள்ளார் அப்போது ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. எந்தவித இன்பெக்ஷன் ஏற்படக்கூடாது. ஆனால் யார் யாரோ உள்ளே வந்து பார்த்துட்டு போகிறார்கள். வந்து பாருங்கள், வந்து பாருங்கள் என கூப்பிடுகிறார்கள்.
ஐயா என்ன எக்ஷிபிஷனா.? ஐயாவுடைய உயிர், ஐயாவுடனைய பாதுகாப்பு முக்கியம். ராமதாசுக்கு ஏதாவது என்றால் தொலைத்து விடுவேன். நான் இருக்கும் போது காரிடார் பக்கம் கூட யாரையும் விட மாட்டேன். இப்போ கதவை கூட தட்டுவதில்லை. நேராக உள்ளே செல்கிறார்கள். தூங்கவிடுவதில்லை , பாத்ரூமில் இருந்தால் கூடா ஐயோ போன் என கொடுக்கிறார்கள் என அன்புமணி விமர்சித்தார்.