த.வெ.க.வின் ஆர்ப்பாட்டத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் நடந்தத காவல்துறை 16 நிபந்தனைகளும் விதித்துள்ளது. அதில், பட்டாசு வெடிக்கக் கூடாது, இருசக்கர வாகன ஊர்வலம் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், காவல் விசாரணையில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சனிக்கிழமை அன்று விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்றுக்கொண்டார்.