நிரம்பிய டிக்கெட் - பொதுமக்கள் அவதி
இருந்த போதும் அனைத்து இடங்களில் முன்பதிவு நிரம்பி விட்டதால் சொந்த காரில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் போன்றவை காரணமாக அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே தனியார் பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது விமான கட்டணம் ராக்கெட் வேகத்தை போல பல மடங்கு அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று சென்னையில் இருந்து கோவை, சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், விமான கட்டணகள் அதிகரித்துள்ளது.