ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதில், ஆளும் கட்சியாக திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.