ராமநாதபுரம் மாவட்டத்தில் 737.88 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைத் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டு 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
16,909 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் புதிய பேருந்து நிலையம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலிருந்து ராமேஸ்வரம் வழியாக செல்லும் பேருந்துகளுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும். இதன் மூலம், ராமநாதபுரம் நகரில் ஏற்கனவே நடைபெற்று வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.