ஆட்சியர்களுக்கு அலர்ட்
அதன் படி கனமழையை பொறுத்தவரை (6.45 செ.மீ முதல் 11. 55 செ.மீ.) மிக அதிக மழை (11.56 செ.மீ. 20.4 செ.மீ.) மிக அதிக மழைப்பொழிவு (20.4 செமீக்கு மேல்) என வகைப்படுத்தப்பட்டுளது. அந்த வகையில் 10 ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 11ஆம் தேதி தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.