மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் கண்டனம் தெரிவித்து இருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெக தலைவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்
அதே வேளையில் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தனர். இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தனர்.