கொலைக்கு முக்கிய காரணம் யார்.?
இதனிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஆற்காடு சுரேஷின் வலது கரமாக 12 வருடங்கள் உடன் இருந்துள்ளார். மேலும் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் என கூறப்படுகிறது. கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்ததும் அருள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்திகளை திருநின்றவூரில் உள்ள அருளின் நண்பர்களாக உள்ள தற்போது பிடித்து விசாரணை செய்யும் மூன்று நபர்கள் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.