அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 3 முறை முதலமைச்சர் பொறுப்பையும் வகித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகளாக பிரிந்தது.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என பிரிந்துள்ளது. இதனால் வாக்குகள் சிதறி கடந்த 10 தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.