சர்ச்சை கருத்தில் சிக்கிய கஸ்தூரி
அரசுத்துறைகளில் சில வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பணியாற்றி வருவதாகவும், அவர்கள் அளவுக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளதாகவும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். மேலும் தெலுங்கு மக்கள் தொடர்பாகவும் தவறாக பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலில் தான் அப்படி எதுவும் பேசவில்லையென கூறியவர், அடுத்தாக தனது பேச்சை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனிடையே அரசு அலுவலர்களின் பணியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதையடுத்து நடிகை கஸ்தூரி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.