உடல் மெலிந்து உயிருக்கு போராடிய ரோபோ சங்கர்!ஆறே மாதத்தில் ஆணழகன் போட்டியில் கட்டு மஸ்தான உடலைக் காட்டி அசத்தல்

Published : Oct 29, 2023, 10:31 AM IST

மதுரையில் நடைபெற்ற 37 வது  ஆணழகன் போட்டியில் சிறப்பு அழைப்பாளர் பிரிவில் கட்டுமஸ்தான உடலை காட்டி பிரபல நகைச்சுவை நடிகர்  ரோபா சங்கர் அசத்தினார்.   

PREV
16
உடல் மெலிந்து உயிருக்கு போராடிய ரோபோ சங்கர்!ஆறே மாதத்தில் ஆணழகன் போட்டியில் கட்டு மஸ்தான உடலைக் காட்டி அசத்தல்
robo shankar, Dhanush

பிரபல காமெடி நடிகரான ரோபா சங்கர், 1997 மிஸ்டர் மதுரை, 1998 மிஸ்டர் தமிழ்நாடு உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளார். தனது உடலில் பெயிண்டை பூசி ரோபோ போல் உடலை அசைத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து தான் அவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது.  தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி வேடங்களில் கலக்கி தற்போது முன்னனி நடிகராக உள்ளார்.

26

 கடந்த வருடம் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக ரோபோ சங்கர் இருந்தார். உடலும் மெலிந்து காணப்பட்டார். இதனையடுத்து மஞ்சல் காமாளைக்கு சிகிச்சை பெற்றதையடுத்து உடல்நிலையில் முன்னேறியது. இந்தநிலையில் மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு தனது உடல் வலிமையை காட்டி அசத்தியது பொதுமக்களை ரசிக்க வைத்தது. 
 

36

மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்  சார்பாக 37 வது ஆண்டு மதுரை ஆணழகன் போட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் கே.கே.நகர், பைபாஸ், செல்லூர், மேலூர், கோரிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டது.  40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களது கட்டுடுலை நடுவர்களின் உத்தரவின்படி செய்து காட்டினர். 

46

ஒவ்வொரு சுற்றுகளிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டு பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிச்சுற்று நடைபெற்றது. இறுதி சுற்றில் உடற் கட்டமைப்பை பெரிய அளவில் , கட்டுடல் இருந்து சிறப்பாக திறமையை வெளிப்டுத்திய மதுரை செல்லூரை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவருக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் என்ற MR. மதுரை பட்டத்தை தட்டிசென்றார். 

56

முன்னதாக இந்த ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரோபா சங்கர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினருக்கான பிரிவில் தனது கட்டுமஸ்தான உடல் பாவனைகளை செய்துகாட்டி அசத்தினர். முன்னதாக இதற்காக வார்ம் அப் செய்து உடலில் ஆயிலை தடவி தயாராகிய ரோபா சங்கர் மேடையில் திறமையை வெளிப்படுத்தியபோது அவரது மகள் மற்றும் மனைவி உள்ளிட்டோரும் உடனிருந்து உற்சாகப்படுத்தினர்.
 

66

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரோபா சங்கர், கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்யாமல் படுத்த படுக்கையில் இருந்தேன். இன்று அதை உடைத்து தன்னம்பிக்கையோடு ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன்.. மருத்துவரின் அறிவுரைகளால் ஓரளவிற்கு என்னுடைய உடலை தேற்றி கொண்டு  மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர் என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளேன்.

படுத்த படுக்கையில் இருந்தால் சிலர் மனது  நொந்து தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். எனவே மன உறுதியாகவும், தன்னபிக்கையோடும்  இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

click me!

Recommended Stories