திடீரென அதிகரித்த காய்கறி விலை
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளில் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக காய்கறி விலையில்பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து திடீர் குறைந்ததன் காரணமாக விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.