திருமாவளவனே இப்படி சொல்லிட்டாரே? ரூட்டை மாற்றும் ஆதவ் அர்ஜூனா! விசிகவில் இருந்து நிரந்தரமாக நீக்கமா?

Published : Dec 15, 2024, 06:03 PM ISTUpdated : Dec 15, 2024, 06:14 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தொடர்ந்து திமுகவையும் திருமாவளவனையும் விமர்சித்து வருகிறார். திருமாவளவன் மீதான அதிருப்தியால் விஜய்யின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

PREV
16
திருமாவளவனே இப்படி சொல்லிட்டாரே? ரூட்டை மாற்றும் ஆதவ் அர்ஜூனா! விசிகவில் இருந்து நிரந்தரமாக நீக்கமா?
Aadhav Arjuna

ஆளும் கூட்டணி இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா: தமிழ்நாட்டில்  மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. தமிழகத்தை இனி ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழகத்தில் மன்னராட்சிக்கு ஒருபோதும் இனி இடம் இல்லை என்று பேசியது மட்டுமல்லாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

26
VCK Aadhav Arjuna News

இவரது பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கட்சியை சேர்ந்தவர்களும் வலியுறுத்தினர். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை  வெளியிட்டார். ஆனாலும் எதற்கு ஆதவ் அர்ஜுனா அடங்காமல் திமுக இன்னும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். 

36
Thirumavalavan

மேலும், திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஜய் பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். திருமாவளவனை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, 'விஜய் விழாவிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் விழாவிற்கு சென்றால் கூட்டணிக்கு கூட்டணியில் பிரச்சனையாகிவிடும். மேலும் விஜய் விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை என எ.வ. வேலு திருமாவளவனிடம் தெரிவித்தார். அவரது அழுத்தம் என்று சொல்வதை விட அவருடைய கருத்தை திருமாவளவன்  உள்வாங்குகிறார் என  ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். 

46

இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்:  அழுத்தம் கொடுத்து யாரும் என்னை இணங்க வைக்க முடியாது. விஜய் கட்சி மாநாடு முடிந்த ஒரு சில நாட்களில் நூல் வெளியிட்டு விழாவில் என்னால் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டேன். அது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு.கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்; ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. 

56
Aadhav Arjuna

அப்படி சொல்லக்கூடாது. ஆதவ் அர்ஜூனா மீண்டும் விடுதலை சிறுத்தைகள் இயக்க வேண்டுமென நினைத்திருந்தால் 6 மாதங்கள் அமைதியாக இருந்திருப்பார். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் முரண்பட்ட கருத்துகளை சொல்வது என்பது அவருக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது என தெரிவித்துள்ளார். 

66

திருமாவளவன் கூறுவதை பார்த்தால் விசிக மீது அதிருப்தியில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories