சிறப்பு பேருந்து அறிவிப்பு
இந்தநிலையில் தற்போதும் வருகிற வெள்ளிக்கிழமை அக்டோபர் 4ஆம் தேதி, சனிக்கிழமை அக்டோபர் 5ஆம் தேதி மற்றும் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான பயணிகள் வெளியூர் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 04/10/2024 (வெள்ளிக்கிழமை) 05/10/2024 (சனிக்கிழமை) 06/10/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு வருகிற 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 260 பேருந்துகளும்,