மாணவர்களும் ஆசிரியர்களும்
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகவும், அதைவிட அதிகளவும் மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு ஊக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் செயல்படுத்தி வருகிறது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்படுகிறது.