தக்காளி சட்னிக்கு தடை
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 140 ரூபாய்க்கும் சில்லரை மார்க்கெட்டில் 160 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்பட்டது. . தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் 170 முதல் 180 ரூபாய்க்கும், வெளி சந்தையில் 200 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று பல்வேறு வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு தக்காளி விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று விவசாயத்தை செய்ய தொடங்கி விட்டனர்.