தங்கப்புதையல் குறித்து தகவல் தெரிவித்தால் அரசு அதை உடனே பறிமுதல் செய்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. அந்தப் பொருளின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் கண்டறியும் வரை அரசு அதைப் பாதுகாக்கும். தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்களில் கிடைக்கும் புதையல்களுக்கு வெவ்வேறு விதமான சட்ட நடைமுறைகள் உள்ளன.
அதாவது உங்கள் நிலத்தில் கிடைக்கும் புதையல் உங்களுக்கே சொந்தமாகும். அதற்கு உரிமை கோர வேறு வாரிசுகள் யாரும் வராத பட்சத்தில், நீதிமன்றத் தீர்ப்புகளின்படி அது உங்களுக்கே சேரும்.
அரசு நிலத்தில் புதையல் கிடைத்தால்?
உங்கள் நிலத்தில் வேறொருவர் புதையலைக் கண்டுபிடித்தால் சட்டப்படி அது சமமாகப் பிரிக்கப்படும். புதையலின் 50% நில உரிமையாளருக்கும், 50% கண்டுபிடித்தவருக்கும் வழங்கப்படும்.
அதே வேளையில் காடுகள், ரயில்வே அல்லது பொதுப்பணித்துறை நிலங்களில் புதையல் கிடைத்தால் அது முழுக்க முழுக்க அரசுக்கே சொந்தம். புதையல் கண்டுபிடித்தவருக்கு அரசு விருப்பப்பட்டால் தான் சன்மானம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.