தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமையை வளர்க்கும் வகையில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்த வகையில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
தமிழக அரசு சார்பில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களின் கலைத்திறமையை வளரக்கும் வகையில் வட்டார, மாவட்டம், மாநில அளவிலான கலைவிழா, விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன் படி, சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளும், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் படி தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களை வெளிநாடு சுற்றுலாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அழைத்து சென்றுள்ளது.
26
மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா
2022-2023 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு நுண் கலைகள் விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
36
வெளிநாடு சுற்றுலா 3 கோடி ஒதுக்கீடு
இதனை தொடர்ந்து 20022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்ற போட்டிகளில் ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
இம்மாணவர்களை பாராட்டும் வகையிலும் மற்றும் அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழக அரசால் 3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர் .
46
ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் சுற்றுலா
ஒவ்வொரு மன்ற வெற்றியாளர்களும் மலோசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்குச் சென்று தங்கள் பயணங்களிலிருந்து விரிவான அனுபவத்தையும் அறிவையும் பெற்றனர். 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்கு பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் 14:02 2024 முதல் 10.02.2024 வரை நடத்தப்பட்டது.
56
தொடரும் கல்வி சுற்றுலா
மாநில அளவிலான மன்றப் போட்டிகள் 27.02.2024 முதல் 14.03.2024 வரை நடத்தப்பட்டன. முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 200 மாணவ மற்றும் மாணவியர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் 22.08 2024 முதல் 27.08.2024 வரை ஹாங்காங் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக 23, 12,2024 அன்று முதல் 27, 12, 20024 வரை 43 மாணவர்கள் 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரும் சிங்கப்பூர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
66
மலேசியாவிற்கு பறந்த மாணவர்கள்
தற்போது 23.02.2025 முதல் 28.02.2025 முடிய 52 மாணவ மற்றும் மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர், அலுவலர்கள் என மொத்த 56 நபர்கள் மலேசியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு புத்திரஜெயா சுற்றுலா, பல்கலைக்கழகம் சுற்றுலா, கே. எல் டவர், கே எல் சிட்டி மற்றும் சாக்லேட் மியூசியம் தமிழ் சங்கம் கூட்டம் பட்டு குகை முருகன் கோயில் மற்றும் ஜென்டிங் ஹைலேண்ட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர். வெளிநாடு சுற்றுலாவிற்கு புறப்பட்ட மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.