இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசுவசதிகளைக் கொண்ட 1, 078பேருந்துகள் உள்ளன.
24
இப்பேருந்துகள் 300 கி. மீ-க்கு மேற்பட்ட நீண்ட தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
34
பட்ஜெட் கூட்டத் தொடரின் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், "அரசு விரைவுபோக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகையாக அடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்" என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
44
இந்தச் சலுகை திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு மாதத்தில் 5 முறை தொடர்ச்சியாக முன்பதிவு செய்த பிறகு, 6-வது முறை முதல் தானாகவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் வகையில் www. tnstc. in இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 3 பேர் பயனடைந்துள்ளனர்.