கொத்தாக வரும் 50 நாள் விடுமுறை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்

Published : Apr 17, 2025, 11:34 AM IST

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23 முதல் 45 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.

PREV
14
கொத்தாக வரும் 50 நாள் விடுமுறை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்

School summer vacation : விடுமுறை என்றால் மாணவர்கள முதல் பெரியோர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஆட்டம் போதும் மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக கொத்தாக தொடர்ந்து 50 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை உள்ளது. மேலும் வெப்ப அலையும் வீச தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.

24
school Exam

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

இந்த நிலையில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் கடும் வெயிலிலும் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். எனவே பள்ளி ஆண்டு இறுதி தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி தேர்வை முன் கூட்டியே நடத்தியது.

அந்த வகையில் 09.04.2025 முதல் 21.04.2025 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 17-ம் தேதியை பள்ளியில் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

34
Schools Holiday

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

இதன் காரணமாக 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றோடு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் 13 நாட்களும், மே மாதம் 30 நாட்களும், ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளி திறக்க வாய்ப்புள்ளதால் அதில் 7 நாட்கள் என சுமார் 50 நாட்கள் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது.  இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இதே போல 12 வது மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. 

44
School summer vacation

50 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

தற்போது 6முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாணவர்களுக்கும் வருகிற 23ஆம் தேதியோடு தேர்வுகள் முடிவடைவதால் அந்த மாணவர்களுக்கும் சுமார் 45 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் பள்ளிகள்  திறப்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories