நீண்ட நேரமாகியும் திறக்காத கதவு! உள்ளே சென்று பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

Published : May 14, 2025, 12:38 PM ISTUpdated : May 14, 2025, 12:42 PM IST

திருச்சியில் கடன் தொல்லையால் துணிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்ஸ். துணிக்கடையை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஆராதனா(9), ஆலியா(3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னம் வழியாக எட்டி பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

23
கடன் தொல்லையால் தற்கொலை

அப்போது அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர். மற்றொரு அறையில் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் போதிய வருமானம் இல்லாததால் கடன் அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

33
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை

முதலில் தங்களது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories