டாஸ்மாக் கடைகள் இந்த தேதியில் இயங்காது.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி - எப்போது தெரியுமா?

First Published Nov 17, 2023, 11:09 PM IST

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.

Tasmac Holiday

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழா. இந்த கந்த சஷ்டி விழா அனைத்து முருகன் கோயில்களிலும் கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Tasmac Leave

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மற்றும் நகரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு 18. 11. 2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-ன்படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 4 (நான்கு) மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

Tasmac

மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் அன்றைய தினம் மதுபான விற்பனை எதுவும் நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!