திடீரென சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அரணை விழுந்த சாம்பார் சாதத்துடன் நியாயம் கேட்க அம்மா உணவகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அம்மா உணவகம் மூடப்பட்டிருந்தது. உடனே சாப்பிட்டதை கைவிட்டு வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டதை அடுத்து தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.