132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இரண்டு முறை நிரம்பியிருந்த இந்த அணை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக மீண்டும் நிரம்பியுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த உபரிநீர் முழுவதும் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆற்றின் கரையோரங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.