இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நெலாக்கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது.
2 நாள் ஆரஞ்சு அலர்ட்
நீலகிரியில் அதிகப்பட்சமாக அவலாஞ்சியில் 292 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 168, பார்சன்சன்ஸ் வேலி 132, பந்தலூர் 130 மி.மீட்டர் பழை பதிவாகி உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.