படிப்பாளிகளின் நகரம்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது கோவை!

Published : Apr 18, 2025, 07:23 PM IST

பெருமைமிகு கோவை விரைவில் இந்தியாவின் முதல் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது! இந்த வரலாற்றுச் சாதனை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

PREV
16
படிப்பாளிகளின் நகரம்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது கோவை!

கல்வி நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் கோவைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டப்படவுள்ளது! விரைவில், கோவை மாவட்டம் இந்தியாவின் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இது, கல்வியில் ஒரு புதிய மைல்கல் மட்டுமல்ல, ஒவ்வொரு கோயை வாசியும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம்.
 

26
Coimbatore

2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' எழுத்தறிவில்லாதவர்களுக்கு ஒளிவிளக்காக அமைந்தது. 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

36
literacy

இந்த உன்னத முயற்சியில், தமிழக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் கைகோர்த்தது. 2024-2025 கல்வியாண்டில், கோவையில் முதற்கட்டமாக 20,199 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக தேர்வுகளையும் எழுதினர்.

தற்போது, இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கோவையின் பல்வேறு பகுதிகளான மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர் மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

46

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - இரண்டாம் கட்டம் ஒரு பார்வை:
இந்த இரண்டாம் கட்ட பயிற்சியில், 1,782 ஆண்களும், 5,464 பெண்களும் உட்பட மொத்தம் 7,246 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கான தேர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த முறை, குறிப்பிட்ட இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எழுதவும் படிக்கவும் தெரியாத ஒவ்வொரு தனிநபரும் கணக்கில் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன" என்று தெரிவித்தனர்.
 

56
BJP MLA Phool Singh Meena

மேலும் அவர்கள் கூறுகையில், "கோவை ஒரு பெரிய மாவட்டம் என்பதால், இங்கு கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ஏற்கனவே, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையிலும் பயிற்சி நிறைவடைந்து, தேர்வில் வெற்றி பெற்றவுடன், வருகிற நவம்பர் மாதத்தில் கோவையும் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்றனர்.

 

66

இந்த அறிவிப்பு, கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. வரும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக கோவை திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கல்வியில் கோவையின் இந்த மகத்தான சாதனை, மற்ற மாவட்டங்களுக்கும் ஒரு உந்துதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. கோவை, கல்வியில் மட்டுமல்ல, வளர்ச்சியிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒரு முன்னோடி மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது!

இதையும் படிங்க: நம்பர் ஒன் தமிழ்நாடு! முதல் முறையாக செமிகண்டக்டர் உற்பத்திக் கருவி ஏற்றுமதி!

Read more Photos on
click me!

Recommended Stories