இந்நிலையில் இன்று உக்கடத்தில் இருந்து சூலூர் நோக்கிச் சென்ற '30 சி' எண் கொண்ட அரசு நகர சொகுசுப் பேருந்தில், சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஓடும் பேருந்தில் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர் ஒருவரின் மடியில், மாணவி ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டே பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் எல்லை மீறியது.