இந்தியாவிலேயே முதன் முறையாக வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் ஐசிஎஃப் ரயில்வே இணைப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 823 பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் ஒரு முதல் ஏசி பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 11 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளும் உள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 பயணிகளும், இரண்டாவது வகுப்பு ஏசி பெட்டிகளில் 188 பயணிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 611 பேரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.