சென்னையில் சோகம்.. தன் உயிரை கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்.. நடந்தது என்ன?

Published : Aug 08, 2023, 11:03 AM ISTUpdated : Aug 08, 2023, 11:10 AM IST

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற மகள்களை தண்டவாளத்தில் இருந்து காப்பாற்றி விட்டு தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
சென்னையில் சோகம்.. தன் உயிரை கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்.. நடந்தது என்ன?

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா. இவருக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் சென்று  ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக  3 பேரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளனர். 

23

பின்னர், வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை  தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் வந்து கொண்டிருப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த  சித்ரா ஒடிச்சென்று மகள்களை தண்டவாளத்திலிருந்து தள்ளிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால், தாய் சித்ரா மீது ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?

33

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- செம ஹேப்பி நியூஸ்! வரும் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு.!

Read more Photos on
click me!

Recommended Stories