இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென இருள் சூழ்ந்தது. இதனையடுத்து பலத்த காற்றுடன் சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம், பரங்கிமலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.