பாலியல் தொந்தரவு
சென்னை நொளம்பூர் பகுதியில் கடந்த 25ம் தேதி இரவு கல்லூரி மாணவி வீட்டிற்கு செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் திடீரென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பொதுமக்கள் வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.