மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லுமா? செல்லாதா? சென்னை ஐகோர்ட் பரபர தீர்ப்பு!

Published : Mar 07, 2025, 11:56 AM ISTUpdated : Mar 07, 2025, 12:00 PM IST

மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை முறையாக காட்டவில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை.

PREV
14
மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.  தயாநிதி மாறனின் வெற்றி செல்லுமா? செல்லாதா? சென்னை ஐகோர்ட் பரபர தீர்ப்பு!
dayanidhi maran

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

24
Loksabha Election Case

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

34
dayanidhi maran Case

மேலும், அவர் தேர்தல் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.95 லட்சத்தை விட அவர் அதிகப்படியான தொகையை செலவிட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவில்லை. எனவே, இந்த தொகுதியில் தயாநிதிமாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

44
Chennai High Court

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.  அதில், இது தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்தக் காரணங்களும் இல்லை எனக்கூறி எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

Read more Photos on
click me!

Recommended Stories