இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை அயனாவரத்தில் 2019ல், லோகு என்பவர் கொலை செய்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராபர்ட், லோகு இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது.