கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?

Published : Mar 03, 2026, 01:05 PM IST

DMK Councillor: ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்து பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

PREV
14
இண்டிகோ விமானம்

திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் பிரபாகரன். இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகுவுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்றார். அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயது பணிப்பெண் ஸ்நாக்ஸ்களை வழங்கி இருக்கிறார். அப்போது மதுபோதையில் இருந்த கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஒருமையில் அழைத்து அவரது ஊர் பெயரை கேட்டதாகவும் கூறப்படுகிறது.

24
திமுக கவுன்சிலர் பாலியல் சீண்டல்

அதுமட்டுமல்லாமல் ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

34
சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது

இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகவில்லை. இந்நிலையில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு நேற்று மாலை டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

44
சிறையில் அடைப்பு

பிரபாகரன் திருவள்ளூர் 6வது வார்டு திமுக கவுன்சிலர் என்பதும் தியாகு என்பவர் வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இந்த இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விமான பெண்ணிடம் ஆளும் திமுக பிரமுகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories