வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் புறப்படும். இதுபோல, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து முதல் ரயில் காலை 5.40 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும். 25 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை. ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.