மேலும், அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி ஆகாஷ்க்கு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து, அவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஆகாஷின் இரண்டு 2 சிறுநீரங்களும் செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.