Minister I. Periyasamy
அமைச்சர் ஐ .பெரியசாமி மீது புகார்
கடந்த 2008-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் உள்ளிட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அதிமுக ஆட்சிக்காலத்தில் 2012ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.