Published : Mar 31, 2025, 09:48 AM ISTUpdated : Mar 31, 2025, 09:50 AM IST
சென்னையில் சொத்து வரி, தொழில் வரி செலுத்த இன்று இறுதி நாள். விடுமுறை நாளிலும் மாநகராட்சி அலுவலகங்கள் செயல்படும். வரி செலுத்த தவறினால் 1% அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, மற்றும் நிறுவன வரியை செலுத்துவதற்கான இறுதிநாள் இன்று (மார்ச் 31). இதுவரை செலுத்தாதவர்கள், நகராட்சி அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், மற்றும் மாநகராட்சி இணையதளத்தின் மூலம் கட்டாயம் செலுத்திவிடுங்கள்.
24
Chennai Corporation Tax Revenue
மாநகராட்சியின் வருவாயில் 35%:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். ஏப்ரல்-செப்டம்பர், அக்டோபர்-மார்ச் என இரண்டு காலகட்டங்களில் சொத்து வரி வசூலிக்கப்படும்.
மாநகராட்சிக்கு சொத்து வரி முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்து வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் இதன் வசூலத்தை அதிகரிக்க தீவிர முயற்சியில் உள்ளனர். மாநகராட்சியின் மொத்த வருவாயில் 35% வரை சொத்து மற்றும் தொழில் வரிகளிலிருந்து பெறப்படுகிறது.
34
Chennai property tax payment
விடுமுறையிலும் வசதி:
இன்று ரமலான் பண்டிகை காரணமாக அரசு விடுமுறை. மேலும், கடந்த இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால், பொதுமக்களுக்கு வசதியாக மாநகராட்சியின் வருவாய் துறை மார்ச் 29, 30, மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தினங்களிலும் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
44
Chennai Corporation property tax penalty
வரி செலுத்தாவிட்டால் அபராதம்:
மாநகராட்சி கடந்த மாதம் முழுவதும் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரி செலுத்த தவறினால், மாதம் ஒரு சதவீத அபராதம் விதிக்கப்படும். மேலும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும். கடுமையான நிலைமையில், ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சென்னைவாசிகள், இன்று கடைசி நாள் என்பதால் உங்கள் சொத்து வரியை உடனடியாக செலுத்தி, அபராதத்திலிருந்து விடுபடுங்கள்!