இதனிடையே ஆர்சிபி அணியின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை டியாஜியோ மேற்கோள் காட்டுவதால், அவ்வளவு விலை கொடுக்க வாங்க முடியுமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதர் பூனவல்லாவின் தந்தை சைரஸ் பூனவல்லாவும் அந்த உரிமையை ஏலம் எடுத்தார். ஆனால் அந்த நேரத்தில், புனே மற்றும் கொச்சி அணிகள் வேறு நிறுவனங்களுக்குச் சென்றன.
2022 ஆம் ஆண்டில், அதானி குழுமமும் அகமதாபாத் உரிமையை வாங்க முயற்சித்தது, ஆனால் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போது, ஆர்சிபி விற்பனைக்கு வந்தால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதும் பிரிட்டனின் Diageo குழுமம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.