பெற்றோர், பயிற்சியாளரிடம் கோபம் காட்டி வீட்டை விட்டு தனியாக லண்டன் சென்றாரா பி.வி.சிந்து??
First Published Oct 21, 2020, 12:12 PM ISTஇந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் அவர் லண்டன் சென்றதாகவும், ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி திருப்தி அளிக்காததால், ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமில் இருந்து பாதியில் விலகி விட்டதாகவும், குறைந்தது 2 மாதங்கள் கழித்து தான் தாயகம் திரும்புவேன் என்று அவர் கூறியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.