IND vs ENG 4th T20: இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடி நீக்கம்? பிளேயிங் லெவன் இதுதான்!

Published : Jan 30, 2025, 03:47 PM ISTUpdated : Jan 31, 2025, 09:56 AM IST

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும் 2 வீரர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
14
IND vs ENG 4th T20: இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடி நீக்கம்? பிளேயிங் லெவன் இதுதான்!
IND vs ENG 4th T20: இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடி நீக்கம்? பிளேயிங் லெவன் இதுதான்!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி. ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று (31ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பவுலிங் சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியாக பேட்டிங்கின் திறன் குறைந்து கொண்டே செல்கிறது. முதல் போட்டியில் நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அடுத்த இரண்டு போட்டிகளில் சொதப்பி விட்ட்டனர். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடர் முழுவதுமே ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறார். இதேபோல் ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டன் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பேட்டிங்கில் செயல்படவில்லை.
 

24
இந்தியா-இங்கிலாந்து டி20

பவுலிங்கை பொறுத்தவரை 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தியுள்ளார். கடந்த போட்டியில் ரவி பிஷ்னோய் அதிக ரன்களை வாரி வழங்கினார். இதேபோல் ஒரு வீசிய வாஷிங்டன் சுந்தரும் ஒரே ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார். பவுலிங்கில் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் இந்தியா முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

புனே பிட்ச்சை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது. பந்து நன்றாக நின்று சுழல்வதால் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் கருப்பு மண் சாயல் கொண்ட இந்த பிட்ச்சில் ஆரம்பத்தில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும். தொடக்கத்தில் அடித்து ஆட முடியும். ஆனால் போகப் போக ரன்கள் அடிப்பது சிரமமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். 

சிங்கம் களம் இறங்கிடுச்சே! மீண்டும் ரஞ்சி போட்டியில் களம் இறங்கிய கிங் கோலி - அதிர்ந்த ஸ்டேடியம்

34
இந்திய அணியில் மாற்றங்கள்

4வது டி20 போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது துருவ் ஜூரல் நீக்கப்பட்டு இவர்களுக்கு பதிலாக ஷிவம் துபே விளையாட வாய்ப்பு இருக்கிறது. துருவ் ஜூரல் கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் வீணடித்தார். இதேபோல் முகமது ஷமி அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மீண்டும் இடம்பெறுகிறார். மேலும் அக்சர் படேலுக்கு பதிலாக ராமன்தீப் சிங் இடம்பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. 

44
இங்கிலாந்து அணி எப்படி?

4வது டி20‍ போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ராமன்தீப் சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் விளையாடிய வீரர்கள் அப்படியே தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷீத்.

ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியுடன் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ்; ஷேன் வார்னேவுக்கு கெளரவம்!

click me!

Recommended Stories