IND vs PAK: பாக் அமைச்சர் கையில் கோப்பை வாங்க மறுப்பு..! வெறுத்து போய் கிரவுண்டை விட்டு வெளியேறிய மோசின் நக்வி

Published : Sep 29, 2025, 08:03 AM IST

India Rejects Asia Cup : பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக இந்தியா கோப்பையை வென்றது. போட்டிக்கு பிறகு, ஏசிசி தலைவர் மற்றும் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது.

PREV
15
பாகிஸ்தான் மீது இந்தியா அபார வெற்றி.. 9வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன்

ஆசிய கோப்பை 2025 இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. துபாயில் நடந்த இந்த வெற்றியின் மூலம், இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது.

25
பிசிபி மொஹ்சின் நக்விக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி

பாகிஸ்தான் அமைச்சர் மற்றும் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இந்த முடிவில் உறுதியாக நின்றது.

35
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோஷம்

போட்டிக்கு பிறகு, ரன்னர்-அப் பதக்கங்களை வாங்க பாகிஸ்தான் வீரர்கள் வந்தபோது, இந்திய ரசிகர்கள் அவர்களை கேலி செய்தனர். இது பாகிஸ்தான் அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

45
ஆசிய கோப்பை 2025 : பதக்கங்களையும் நிராகரித்த இந்தியா

கோப்பையை மட்டுமல்ல, பதக்கங்களையும் இந்திய வீரர்கள் வாங்க மறுத்தனர். சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் புகைப்படம் எடுக்கவும் மறுத்துவிட்டார். இந்த நிகழ்வு ஆசிய கோப்பை வரலாற்றில் சர்ச்சைக்குரியதாக மாறியது.

55
ஆசிய கோப்பை 2025 இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஹைலைட்ஸ்

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. திலக் வர்மா 69* ரன்கள் எடுத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories