இதனால் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவிய நிலையில், அதை அவர் மறுத்தார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தோல்வி குறித்து ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்திய பிசிசிஐ, அணியில் அவரது எதிர்காலம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் இந்திய அணியில் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டன் ரேஸில் உள்ளனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஓடிஐகளுக்கு புதிய கேப்டன் நியக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சோனமுத்தா இதுவும் போச்சா! பாகிஸ்தானை வச்சி செய்யும் நெட்டிசன்கள்! என்ன விஷயம்?